ஜெயலலிதா நலம் பெற.. மானாமதுரை எம்எல்ஏ மாரியப்பன் கென்னடி பாதயாத்திரை, சிறப்பு யாகம்!
மதுரை: முதல்வர் ஜெயலலிதா விரைந்து நலம்பெற வேண்டி, மானாமதுரை சட்டசபை உறுப்பினர் மாரியப்பன் கென்னடி, தாய மங்கலம் முத்துமாரியம்மன் கோயில் வரை பாத யாத்திரை சென்றதோடு, சிறப்பு யாகம் நடத்தினார்.
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான, ஜெயலலிதா, கடந்த மாதம் 22ம் தேதி முதல், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து கட்சியின் பல்வேறு கட்ட நிர்வாகிகளும், பல்வேறு கோயில்களில் சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். கிறிஸ்த நிர்வாகிகள் ஜெபக்கூட்டங்கள் நடத்துகிறார்கள், இஸ்லாமிய நிர்வாகிகள் சிறப்பு தொழுகைகளை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், ஜெயலலிதா, பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்பிட வேண்டி மானாமதுரை அதிமுக எம்.எல்.ஏ, மாரியப்பன் கென்னடி, தலைமையில் முதன்முறையாக தாயமங்கலம் முத்துமாரியம்மன் திருக்கோவிலுக்கு பாதயாத்திரை நடைபெற்றது. அதேபோல முதல்வர் ஜெயலலிதா, பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்பிட வேண்டி தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு யாகம் நடைப்பெற்றது.
இதில் மாரியப்பன் கென்னடியும், அவருடன், திரளான கட்சி தொண்டர்களும் கலந்து கொண்டு, முதல்வர் விரைந்து நலம் பெற மனமுருக வேண்டிக்கொண்டனர்.