For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதா கோமா நிலையில் இல்லை....சுயநினைவுடனே உள்ளார்: பொன்னையன் பரபரப்பு தகவல்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா கோமா நிலையில் இல்லை; சுயநினைவுடனே உள்ளார் என்று அதிமுக மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் சி. பொன்னையன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அக்னி பரீட்சை நிகழ்ச்சியில் பங்கேற்ற பொன்னையன் கூறியதாவது:

Jayalalithaa recovering, not in Coma, says Ponnaiyan

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவின் ஒப்புதலுடனேயே அனைத்து அரசு அறிவிப்புகளும் வெளியாகின்றன. டெல்லியில் நடைபெற்ற காவிரி தொடர்பான பேச்சுவார்த்தை குறித்து ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்.

டெல்லியில் வாசிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவின் உரைக்கு அவரது ஒப்புதல் பெறப்பட்டது. அத்துடன் என்ன மாதிரியான கருத்துகளை முன்வைக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டினார் ஜெயலலிதா.

முதல்வர் ஜெயலலிதா கோமா நிலையில் ஒன்றும் இல்லை. நல்ல சுயநினைவுடனேயே உள்ளார். அனைத்து முடிவுகளுக்கும் அவரது ஒப்புதல் பெறப்படுகிறது.

இவ்வாறு பொன்னையன் கூறினார்.

English summary
Senior ADMK leader C Ponnaiyan said that CM Jayalalithaa who was admitted to a hospital due to fever is recovering and she is not in Coma stage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X