For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோடநாட்டில் இருந்து நாளை சென்னை திரும்புகிறார் முதல்வர் ஜெயலலிதா!

Google Oneindia Tamil News

சென்னை: நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் இருந்து நாளை பிற்பகல் முதல்வர் ஜெயலலிதா சென்னை திரும்புகின்றார்.

தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கை விவாதம் நடந்து முடிந்த நிலையில், கடந்த மாதம் அக்டோபர் 14 ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதா நீலகிரி மாவட்டம் கோடநாடு புறப்பட்டு சென்றார்.

சென்னையில் இருந்து தனி விமானத்தில் கோயம்புத்தூர் சென்ற ஜெயலலிதா, பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோடநாடு சென்றார்.

Jayalalithaa to return from Kodanad on sunday

சுமார் 3 வார காலம் அங்கிருந்தபடியே, முதல்வர் ஜெயலலிதா அரசுப் பணிகளை கவனித்து வந்தார். இந்த நிலையில் கோடநாட்டில் இருந்து நாளை பிற்பகல் முதல்வர் ஜெயலலிதா சென்னை திரும்புகிறார்.

கோடநாட்டில் இருந்து ஹெலிகாப்டரில் கோயம்புத்தூர் விமான நிலையம் வரும் அவர், பின்னர் அங்கிருந்து தனி விமானத்தில் சென்னை திரும்புகிறார்.

English summary
Tamil Nadu Chief Minister Jayalalithaa is likely to leave Kodanad for Chennai on tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X