ஜெயலலிதாவின் வேதாநிலையம் வீட்டு கிரகப்பிரவேசம்... வைரலாகும் பத்திரிக்கை
ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த வேதாநிலையம் வீட்டு கிரகப்பிரவேச நிகழ்ச்சி பத்திரிக்கை இப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகிறது.
Recommended Video
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதாநிலையம் பங்களாவின் கிரகப்பிரவேச பத்திரிக்கை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை மட்டுமல்ல இந்தியா முழுவதுமே போயஸ்கார்டன் என்றாலே நினைவுக்கு வருபவர் ஜெயலலிதாதான். கடந்த 44 ஆண்டுகளாக அங்கு வசித்து வந்தார் ஜெயலலிதாதான்.
ஜெயலலிதா வீட்டிற்கு அரசியல் கட்சித்தலைவர்கள், திரை உலக பிரபலங்கள் சென்றுள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்த பிரதமர் மோடி வேதாநிலையம் சென்று விருந்து சாப்பிட்டார்.
ஜெயலலிதாவின் அம்மா பெயர்
சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் வேதாநிலையம் கிரகப்பிரவேசம் 44 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1972ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி நடந்துள்ளது. தனது தாயாரின் நினைவாகவே வேதாநிலையம் என்று பெயர் சூட்டினார் ஜெயலலிதா.
சமூக வலைத்தளங்களில் வைரல்
இந்த வீட்டின் கிரகப்பிரவேச நிகழ்ச்சி அழைப்பிதல் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. கிரகப்பிரவேச அழைப்பிதழ் மிக எளிமையாகவும், அதே நேரம் மிகுந்த ரசனையுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் தெய்வம்
கைவினைத் திறன்மிக்க இரு கதவுகள் திறந்தவுடன் அழைப்பு வாசகங்கள் அமைந்திருக்குமாறு உள்ள இந்த அழைப்பிதழின் முகப்பில் விநாயகர் படம் பொறிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவிற்கு பிடித்த தெய்வம் விநாயகர்.
அடையாளம் சொல்லும் அழைப்பிதழ்
கிரகப்பிரவேசத்துக்கு வரும் உறவினர்கள், நண்பர்கள் இடம் தேடி அலையக்கூடாது என்பதற்காக, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு பின்புறம் - ரயில்வே தேர்வாணைய அலுவலகத்துக்கு அருகில் - கதீட்ரல் சாலை என மிக விளக்கமாக இதில் முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது.
போயஸ்கார்டன் வீடு
கிரகப்பிரவேசத்தை முன்னிட்டு மாலை விருந்தின்போது பிரபல இசைக்கலைஞர் சிட்டி பாபுவின் வீணைக் கச்சேரி நடப்பதாகவும் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத தலைவியாக வாழ்ந்து மறைந்த ஜெயலலிதாவின் வீடு அதிமுகவினரின் கோவிலாக வணங்கப்படுகிறது. சமீபத்தில் வருமானவரி சோதனைக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.