For Quick Alerts
For Daily Alerts
Just In
ஜெ. உடல்நிலை பாதிப்பு செய்தியை பார்த்த கடலூர் அதிமுக பிரமுகர் நெஞ்சுவலியால் மரணம்
ஜெயலலிதா உடல்நிலை குறித்த செய்தியை பார்த்த கடலூர் அதிமுக பிரமுகர் நீலகண்டன் நெஞ்சுவலியால் உயிரிழந்தார்.
கடலூர்: ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்ட செய்தியை டிவியில் பார்த்த கடலூர் அதிமுக பிரமுகர் நீலகண்டன் (வயது 40) நெஞ்சுவலியால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டது. இச்செய்தியை டிவியில் பார்த்து கொண்டிருந்த கடலூர் சன்னியாசிபேட்டையைச் சேர்ந்த அதிமுக பிரமுகருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.
அவரை குடும்பத்தினர் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நீலகண்டன் உயிரிழந்தார். இச்சம்பவம் அதிமுகவினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Comments
jayalalitha health apollo hospital cuddalore admk supporter die ஜெயலலிதா உடல்நிலை அப்பல்லோ கடலூர் அதிமுக ஆதரவாளர் மரணம்
English summary
A 40 year old AIADMK worker died after he developed chest pain while watching news on Jayalalithaa's health. The man identified as Neelakandan, a resident of Cuddalore, died enroute to the hospital on Monday morning.
Story first published: Monday, December 5, 2016, 12:07 [IST]