போயஸ் கார்டனில் அன்றிரவு நடந்தது என்ன? விசாரணை வளையத்தில் ராஜம்மாள்
போயஸ் கார்டனில் இருந்து ஆம்புலன்ஸில் ஜெயலலிதா ஏற்றப்படுவதற்கு முன்பாக நடந்த சில சம்பவங்கள் இன்னும் நிரூபிக்கப்படவில்லை
போயஸ் கார்டனில் இருந்து ஆம்புலன்ஸில் ஜெயலலிதா ஏற்றப்படுவதற்கு முன்பாக நடந்த சில சம்பவங்கள் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. செப்டம்பர் 22ஆம் தேதி இரவில் நடந்த சம்பவம் மர்மமாகவே உள்ளது.
போயஸ் கார்டனில் சசிகலாவுடன் ஜெயலலிதா கடுமையாக சண்டை போட்டதாகவும் முடிவில் அவர் தள்ளிவிடப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதன் விளைவாகவே மயக்கநிலைக்கு ஜெயலலிதா சென்றார் எனவும் சொல்கின்றனர்.
இந்த விவகாரத்தை முழுதாக அறிந்தவர்கள் கார்டன் ஊழியர்கள். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு பெரும்பாலான ஊழியர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிவிட்டனர். இப்போது அங்கு தங்கியிருப்பது ராஜம்மாள் என்பவர் மட்டும்தான். இவர் ஜெயலலிதாவின் அம்மா சந்தியா, கார்டனில் வீடு வாங்கிய காலத்தில் இருந்து வேலை செய்து வருபவர்.
போயஸ் கார்டனில் நடந்த கடைசிக்கட்ட காட்சிகளை நன்கு அறிந்து வைத்திருப்பவர். இவரை விசாரித்தால் அனைத்து உண்மைகளும் வெளியில் வரும் என தினகரனுக்கு எதிராக வரிந்து கட்டும் மன்னார்குடி அ.தி.மு.க பிரமுகர்கள் பேசி வருகின்றனர்.