பாலாற்றங்கரையில் மகா பெரியவருக்கு அருகில் ஜெயேந்திரருக்கு சமாதி!
Recommended Video
காஞ்சிபுரம்: இன்று காலை மரணமடைந்த காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரரின் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படுகிறது. காஞ்சிபுரம் பாலாற்றங்கரையில் உள்ள மகாபெரியவரின் அதிஷ்டானம் அருகில் ஜெயேந்திரருக்கும் சமாதி அமைக்கப்படுகிறது.
காஞ்சிபுரம் உத்திரமேரூர் சாலையில் உள்ள ஓரிக்கை என்ற இடத்தில் சங்கரமடத்தின் கிளை உள்ளது. ஜெயேந்திரர் பாலபெரியவராக இருந்த காலத்தில் இங்குதான் வேதங்கள் உள்ளிட்ட மடத்துக்கான பாடங்களையும் பயிற்சிகளையும் பெற்றார்.
மகா பெரியவர் சந்திரசேகரேந்திரர் மரணமடைந்த பிறகு, அவருக்கான அதிஷ்டானம் (சமாதி) ஓரிக்கை அருகில் உள்ள பாலாற்றங்கரையில்தான் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தைத் தேர்வு செய்தவர் ஜெயேந்திரர்தான்.
இப்போது மரணமடைந்துள்ள ஜெயேந்திரரின் உடலையும் இந்த அதிஷ்டானத்துக்கு அருகிலேயே நல்லடக்கம் செய்கின்றனர். அந்த இடத்திலேயே ஜெயேந்திரரின் சமாதியும் அமைக்கப்படும் என சங்கர மட நிர்வாகி தெரிவித்துள்ளார்.