For Daily Alerts
Just In
திருவாவடுதுறை ஆதினமடத்தில் தங்க முலாம் பூசப்பட்ட கிரீடம், தங்க பாதம், கரம் உட்பட 10 நகைகள் அபேஸ்!
அம்பாசமுத்திரம்: கல்லிடைக்குறிச்சியில் திருவாவடுதுறை ஆதின மடத்தில் நகைகள் திருடுபோன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அம்பாசமுத்திரம் அருகே உள்ள கல்லிடைக்குறிச்சி திருவாவடுதுறை ஆதின மடத்தில உள்ள மாநந்தியப்பர் கோவிலில் நகைகள் திருடு போயிருப்பதாக நிர்வாகி பாலாசுப்பிரமணியம் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
கோவிலில் இருந்த தங்க முலாம் பூசிய 2 கிரீடங்கள், வெள்ளிக்கம்பியில் பொதித்த ருத்ராட்ச மாலை, சுவாமியின் தங்க கரம் 2, தங்க பாதம் ஒன்று, தங்கக்கொடியில் கோர்த்த சிவப்பு கல் பதக்கம் 2 உள்ளிட்ட மொத்தம் 10 நகைகள் திருடு போயுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருவாவடுதுறை ஆதினத்தில் நகைகள் திருடு போயுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
English summary
Jewels missing in Thiruvavaduthurai Aadhinam near in Ambasamuthiram. Over all 10 jewels missing in the Aadhinam.