For Daily Alerts
Just In
போன் பேச முடியவில்லை.. திடீர் என்று 3 மணிநேரம் வேலை செய்யாமல் போன ஜியோ
இந்தியா முழுவதும் திடீர் என்று சில மணிநேரங்கள் ஜியோ வேலை செய்யவில்லை.
சென்னை: இந்தியா முழுவதும் திடீர் என்று 3 மணிநேரம் ஜியோ நெட்வொர்க் வேலை செய்யாமல் போனதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
ஏர்செல் மொபைல் சர்வீஸ் கடந்த சில மாதங்களுக்கு பலருக்கும் எடுக்கவில்லை. பின் ஏர்செல் நிறுவனம் மொத்தமாக மூடப்பட்டது.
இதனால் சிலர் வேறு மொபைல் சர்விஸுக்கு மாறிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு சில மணிநேரங்கள் ஜியோ நெட்வொர்க் சேவையில் தடங்கல் ஏற்பட்டது.
இந்தியா முழுவதும் இந்த பிரச்சனை ஏற்பட்டது. மாலை 6 மணிக்கு ஜியோ வேலை செய்யாமல் போனது. இரவு 9 மணி அளவில் சரி ஆகிவிட்டது.
3 மணிநேரம் வாய்ஸ் கால், இணையம் இயங்கவில்லை. கால் செய்ய முடியாமல் வாடிக்கையாளர்கள் அவதிபட்டனர்.
Comments
English summary
Jio faces network problem in many states, people complaints. The network may come to normal after 9.