ஆர்எஸ்எஸ் அமைப்பை போல ஆங்கில அரசுக்கு சேவகம் செய்யவில்லை... எச் ராஜாவுக்கு காங் ஜோதிமணி பதிலடி
சென்னை: ஆர்எஸ்எஸ் அமைப்பை போல ஆங்கில அரசுக்கு சேவகம் செய்யவில்லை என்று எச் ராஜாவுக்கு ஜோதிமணி பதிலடி கொடுத்துள்ளார்.
இன்று 72-ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதுகுறித்து வாழ்த்து கூறுகிறேன் என்ற பெயரில் ஒரு டுவீட்டை எச் ராஜா பதிவு செய்தார்.
அதில் அவர் பதிவிடுகையில் அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். நம் முன்னோர்கள் தியாகம் செய்து பெற்ற சுதந்திரத்தை எவ்விலை கொடுத்தும் காத்திட உறுதியேற்போம். அப்பழுக்கற்ற தேசபக்தியே இன்றைய தேவை என்று எச் ராஜா கூறியுள்ளார்.
இதற்கு காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ஜோதிமணி பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில் அந்த "முன்னோர்கள்" இந்திய தேசிய காங்கிரஸ், கிலாபத் இயக்கம், முஸ்லீம் லீக் தலைமையில் தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்தனர், சிறையில் வெந்தனர்,செக்கிழுத்தனர். ஆர் எஸ் எஸ் போல ஆங்கில அரசுக்கு சேவகம் செய்யவில்லை. இந்திய சுதந்திரப்போரட்டத்திற்கு துரோகம் செய்யவில்லை. வரலாறு முக்கியம்! என்று ஜோதிமணி குறிப்பிட்டுள்ளார்.
அந்த "முன்னோர்கள்" இந்திய தேசிய காங்கிரஸ்,கிலாபத் இயக்கம்,முஸ்லீம் லீக் தலைமையில் தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்தனர்,,சிறையில் வெந்தனர்,செக்கிழுத்தனர். ஆர் எஸ் எஸ் போல ஆங்கில அரசுக்கு சேவகம் செய்யவில்லை.இந்திய சுதந்திரப்போரட்டத்திற்கு துரோகம் செய்யவில்லை.வரலாறு முக்கியம் ! https://t.co/LYmShLRNVG
— Jothimani (@jothims) August 15, 2018
வழக்கம்போல் எதையாவது டுவிட்டரிலோ அல்லது பேஸ்புக்கிலோ போட்டுவிட்டு நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்வார். இந்த முறை காங்கிரஸ் நிர்வாகியிடம் பதிலடி பெற்றுள்ளார் எச் ராஜா.