அரசு திட்டங்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள் என்றால் சிலை திருடுபவர்கள் தேசப்பற்றாளர்களா?... ஜோதிமணி
அரசு திட்டங்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள் என்றால் சிலை திருடுபவர்கள் தேசப்பற்றாளர்களா என்று ஜோதிமணி கேள்வி எழுப்பினார்.
சென்னை: அரசு திட்டங்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள் என்றால் சிலை திருடுபவர்கள் தேசப்பற்றாளர்களா என்று பொன் ராதாகிருஷ்ணனுக்கு காங்கிரஸ் தலைவர் ஜோதி மணி கேள்வி எழுப்பினார்.
சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராடி வருகின்றனர். நிலங்களை கையகப்படுத்த விடாமல் விவசாயிகள் தடுக்கின்றனர்.
பொன்னார் அவர்களே அரசு திட்டங்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள் என்றால்
— Jothimani (@jothims) July 7, 2018
இந்த சிலை திருடுபவர்கள், கலவரங்களை உருவாக்குபவர்கள், மக்களை சுட்டுப் பொசுக்குபவர்கள், போராட்டங்களை,உரிமைகளை கொச்சைப் படுத்துபவர்கள்,சுதந்திரப் போராட்டத்திற்கு துரோகம் செய்தவர்கள் இவர்களெல்லாம் தேசப்பற்றாளர்களா?
இதுகுறித்து பொன் ராதாகிருஷ்ணன் கூறுகையில் அரசு திட்டங்களுக்கு எதிராக போராடுபவர்கள் தீவிரவாதிகள் என்று கருத்து தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர் ஜோதிமணி தனது டுவிட்டர் பக்கத்தில் பொன்னார் அவர்களே அரசு திட்டங்களை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகள் என்றால் இந்த சிலை திருடுபவர்கள், கலவரங்களை உருவாக்குபவர்கள், மக்களை சுட்டுப் பொசுக்குபவர்கள், போராட்டங்களை,உரிமைகளை கொச்சைப் படுத்துபவர்கள்,சுதந்திரப் போராட்டத்திற்கு துரோகம் செய்தவர்கள் இவர்களெல்லாம் தேசப்பற்றாளர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.