அச்சே தீன் ஆனே வாலா நஹி ஹே! அச்சே தீன் யானை விலை ஹே! பெட்ரோல், டீசல் விலை.. விளாசும் ஜோதிமணி
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை தமிழக காங்கிரஸ் நிர்வாகி ஜோதிமணி விமர்சித்துள்ளார்.
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை தமிழக காங்கிரஸ் நிர்வாகி ஜோதிமணி கடுமையாக விமர்சித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளதால் ஈரானில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயில் 40 சதவீதம் முடங்கியுள்ளது.
இதனால் கச்சா எண்ணெய் தேவை அதிகரித்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் டீசல் விலை இதுவரை இல்லாத அளவு விலை உயர்வை சந்தித்து வருகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்வையையே சந்தித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி நேற்றைய விலையிலிருந்து 15 காசுகள் அதிகரித்து டீசல் லிட்டருக்கு 73.69 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல் விலை 13 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.81.22 ரூபாயாக உள்ளது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை தமிழக காங்கிரஸ் நிர்வாகி ஜோதிமணி தனது டிவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கரூரில் டீசல் விலை ₹73.89 ,பெட்ரோல் ₹81.42 என பதிவிட்டுள்ள அவர், அச்சே தீன் ஆனே வாலா நஹி ஹே!
அச்சே தீன் யானை விலை ஹே! என பதிவிட்டுள்ளார்.
கருரில் டீசல் விலை ₹73.89 ,பெட்ரோல் ₹81.42
— Jothimani (@jothims) August 28, 2018
அச்சே தீன் ஆனே வாலா நஹி ஹே!
அச்சே தீன் யானை விலை ஹே!
அதாவது நல்ல நாள் வரவில்லை. விலை மட்டும் யானை விலை உள்ளது என விமர்சித்துள்ளார்.