எஸ்.வி.சேகருக்கு அடைக்கலம்? தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மீது வழக்கு
எஸ் வி சேகருக்கு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அடைக்கலம் கொடுத்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: பெண் செய்தியாளர்களை இழிவுபடுத்திய வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வரும் நடிகர் எஸ்.வி. சேகருக்கு அவரது உறவினரும் தலைமைச் செயலாளருமான கிரிஜா வைத்தியநாதன் அடைக்கலம் கொடுத்திருப்பதாக குற்றம்சாட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கில் விரைவில் விசாரணை நடைபெற உள்ளது.
பெண் செய்தியாளர்களை இழிவுபடுத்தும் பதிவை தமது சமூக வலைதளங்களில் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார். இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக எஸ்.வி.சேகர் எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை.
இதனிடையே எஸ்.வி.சேகருக்கு அவரது உறவினரும் தலைமைச் செயலாளருமான கிரிஜா வைத்தியநாதன் அடைக்கலம் கொடுத்திருப்பதாகவும் அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்த வேண்டும் என்றும் பத்திரிகையாளர் கவின்மலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கில் விரைவில் விசாரணை நடைபெற உள்ளது.