For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னாது பேனா, பென்சில் திருடுவாரா.. நீதிபதி சரமாரி கேள்வி... திக்குமுக்காடிய தி.மலை கல்லூரி முதல்வர்

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    மாணவி பாலியல் புகார்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்- வீடியோ

    திருவண்ணாமலை: மாணவி பேனா, பென்சில் திருடுவதாக கூறுகிறீர்களே அதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி மகிழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் கல்லூரி முதல்வர் திக்குமுக்காடினார்.

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில் உள்ள அரசு வேளாண் கல்லூரியில் பிஎஸ்சி பிடித்து வந்த சென்னை மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக பேராசிரியர்கள் தங்கபாண்டியன், புனிதா மற்றும் மைதிலி ஆகியோர் மீது புகார் எழுந்தது.

    Judge questions Agricultural College Principal

    இதுகுறித்து புகாரின்பேரில் மாவட்ட நீதிபதி மகிழேந்தி விசாரணை நடத்தினார். அப்போது அவர் மாணவிகள், பேராசிரியர் மற்றும் கல்லூரி முதல்வர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.

    அப்போது மாணவிகள் நீதிபதியிடம் கூறுகையில் புகார் கூறிய அந்த மாணவி எங்களது கல்லூரி அடையாள அட்டை, பேனா, பென்சில், மூக்குக் கண்ணாடிகள் ஆகியவற்றை திருடுவார் என்று புகார் அளித்தனர். அப்போது நீதிபதி அந்த மாணவிக்கு பொருட்களை திருடுவதுதான் வேலையா, படிக்கும் வேலையெல்லாம் இல்லையா, தொலைந்து போன ஐடி கார்டுகளுக்கு பதில் புதிய கார்டு கொடுத்தற்கான ரசீதுகள் உள்ளனவா என கேட்டார்.

    இதற்கு முதல்வர் ராஜேந்திரன் ரசீதுகள் பழைய கட்டடத்தில் உள்ளன என்றார். பேராசிரியர்களை விசாரணை நடத்த மனித உரிமை கழகத்தினர் கல்லூரிக்கு வந்து 4 அல்லது 5 நாட்கள் தங்கி விசாரணை நடத்துவர் என்றார் நீதிபதி.

    English summary
    DM Magizhendi interrogates the College Principal by raising questions in all ways.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X