மொட்டு மலராகும் முன்பே சாம்பலாக்கப்பட்டுள்ளது- ஹாசினி வழக்கில் நீதிபதிகள்
மொட்டு மலராகும் முன்பே சாம்பலாக்கப்பட்டுவிட்டது என்று ஹாசினி வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
Recommended Video
சென்னை: மொட்டு மலராகும் முன்பே சாம்பலாக்கப்பட்டுவிட்டது என்று ஹாசினி வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
சென்னை குன்றத்தூரை சேர்ந்தவர் தஷ்வந்த். மென்பொறியாளரான இவர் மவுலிவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பக்கத்து வீட்டை சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு அவரை கொன்று உடலை எரித்தார் தஷ்வந்த். அவருக்கு கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தூக்கு தண்டனை அளித்தது.
மொட்டு மலராகும்
இதை எதிர்த்து தஷ்வந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில் செங்கல்பட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. அப்போது நீதிபதிகள் விமலா மற்றும் ராமதிலகம் ஆகியோர் தங்கள்து தீர்ப்பில் கூறுகையில், மொட்டு மலராகும் முன்பே சாம்பலாக்கப்பட்டுவிட்டது.
சரியானது
தஷ்வந்த செய்த குற்றத்தை விட அதை செய்ய வேண்டும் என்ற அவரது எண்ணம் கொடூரமானது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க தூக்கு தண்டனையே சரியானது.
தூக்குத் தண்டனை
தஷ்வந்த் தூக்குக் கயிற்றில் தொங்கும் கடைசி நொடி காமத்துக்கான கடைசி நொடியாக இருக்க வேண்டும். தஷ்வந்த் செய்த குற்றத்துக்கு தூக்கு தண்டனையை தவிர வேறு தண்டனை ஈடாகாது.
திருமண வாழ்க்கை
நிரபராதியை தண்டிப்பது தவறு. அதேபோல் குற்றவாளியை தண்டிக்காமல் விடுவது அநீதி ஆகும். பாலியல் திருமண வாழ்க்கையிலும் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.
பாதுகாப்பு இல்லாத..
மகிழ்ச்சியான, ஆரோக்கியமான குழந்தை பருவத்தை அனுபவிக்க அரசியல் சாசனம் உரிமை தந்துள்ளது. கொடூரத்தின் வலியை நீதிமன்றத்தின் வார்த்தைகளால் ஈடு செய்ய முடியாது. குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை நினைக்கும் போது வேதனையாக உள்ளது என்று தெரிவித்தனர்.