9... இது போன தேர்தலில் வெற்றிக் கொடி நாட்டிய சுயேச்சைகளின் கணக்கு..!
சென்னை: சாதாரண கவுன்சிலர் தேர்தல் முதல் குடியரசுத் தலைவர் தேர்தல் வரை சுயேச்சைகள் ராஜ்ஜியம்தான் கொடி கட்டிப் பறக்கும். ஆனால் அதில் வெற்றி பெறுபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்..
முதல் ஆளாக போட்டியிட மனு தாக்கல் செய்வதும் சுயேச்சைகள்தான்.. கடைசி இடத்தைப் பிடித்து கன்னாபின்னாவென்று காணாமல் போவதிலும் சுயேச்சைகள்தான் முதலிடம்.
இந்தியாவில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட சுயேச்சைகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருந்தும் வெறும் 9 பேர் மட்டுமே நாடாளுமன்றத்திற்குள் நுழைய முடிந்தது.
கட்சி வேட்பாளர்கள் 1623
கடந்த லோக்சபா தேர்தலில் அரசியல் கட்சிகள் சார்பில் 1623 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
ஜெயித்தது 376
இதில் வெற்றி பெற்றவர்கள் எண்ணிக்கை 376 பேர் ஆகும்.
மாநிலக் கட்சிக்காரர்கள் 146 பேர்
மாநில கட்சிகளின் சார்பில் மொத்தம் 394 பேர் நிறுத்தப்பட்டனர். இவர்களில் 146 பேர் வென்றனர்.
அங்கீகாரமே இல்லாதவர்கள் 2222
அங்கீகாரம் இல்லாத, அதாவது வெறுமனே தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு தேர்தலில் போட்டியிட்டவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். அதாவது 2222 பேர்.
ஜெயித்தது 12 பேர்தானே
ஆனால் இவர்களில் வெற்றி பெற்றவர்கள் எண்ணிக்கை வெறும் 12 பேர்தான்.
சுயேச்சைகள்தான் டாப்...
சுயேச்சைகள்தான் வழக்கம் போல அதிக எண்ணிக்கையில் களம் கண்டனர். அதாவது 3831 பேர் போட்டியிட்டனர்.
வென்றது 9...
இதில் ஜெயித்து லோக்சபாவுக்குள் காலெடி எடுத்து வைத்த அதிர்ஷ்டசாலிகள் 9 பேர்தான்.