For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை கூர்நோக்கு இல்லத்தில் சிறுவர்களிடையே மீண்டும் மோதல்: 4 பேர் காயம்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை புரசைவாக்கம் அரசு கூர்நோக்கு இல்லத்தில் சிறுவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து விசாரனை நடந்து வருகிறது.

சென்னை புரசைவாக்கம் பகுதியில் அரசினர் கூர்நோக்கு இல்லம் என்ற சிறுவர் சீர்திருத்தப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 18 வயதுக்குக் கீழ் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு இங்கு அடைக்கப்படுகின்றனர். 75-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். இந்த இல்லத்தில் நேற்று மாலை இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

 Juvenile home inmates clash

இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். இருப்பினும் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில் 4 பேர் காயமடைந்தனர்.இதையடுத்து போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

மோதல் நடைபெற்ற இடத்தில் சமூக பாதுகாப்பு துறை இயக்குனர் லால்வீனா ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மோதலில் தொடர்புடைய 6 சிறுவர்கள் செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்திற்கு மாற்றப்பட்டனர். கடந்த மாதம் இதேபோல் இங்கு நடந்த மோதலில் 32 சிறுவர்கள் சுவர் ஏறி குதித்து தப்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

English summary
Juvenile home inmates clash, 4 injured Observation Home on Purasawalkam, chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X