For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நல்ல கொள்கை வீரரை நாடு இழந்துவிட்டது.. கி.வீரமணி இரங்கல்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: பழக மிகவும் இனிமையானவர் மா.நன்னன் என்று திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், "இளைஞர்களை ஊக்குவிப்பதில் அவருக்கு நிகர் அவரே. மா.நன்னன் இறந்தது யாருக்கு இழப்பு என்று தெரியவில்லை.

இந்த இழப்பு சுயமரியாதை இயக்கத்திற்கா, தமிழ் மொழிக்கா, இளம் தலைமுறைக்கா என புரியவில்லை. தமிழகம் மிகச்சிறந்த ஒரு அறிஞரை இழந்துள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

K.Veeramani condoles Ma.Nannan death

இதுகுறித்து திராவிட இயக்க தலைவர் கி.வீரமணி கூறுகையில், மிகப்பெரிய அளவில் அதிர்ச்சிக்குரியது என்றபோதிலும், எங்களை சமீபத்தில் அழைத்து பேசினார். நான் திராவிட இயக்க சித்தாந்தவாதியாகவே மரணமடையப்போகிறேன் என்பதை பதிவு செய்தார்.

ஆத்தீகவாதியாக இருந்த அவர் பிறகு பகுத்தறிவு கொள்கைக்கு மாறினார். தமிழ் மொழி உணர்வாளராக இருந்தார். நன்னன் புகழ் என்றைக்கும் இருக்கும். நல்ல கொள்கை வீரரை நாடு இழந்துவிட்டது என்ற நிலையிலே, அவருக்கு வீர வணக்கம் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு வீரமணி தெரிவித்தார்.

English summary
K.Veeramani and Trichy Siava condoles Ma.Nannan death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X