திராவிட அரசியல் என்னும் இரும்புக் கோட்டையை ஈக்களால் தகர்க்க முடியாது... கி. வீரமணி
திராவிட அரசியல் என்னும் இரும்புக் கோட்டையை ஈக்களால் தகர்க்க முடியாது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.
சென்னை : திராவிட அரசியல் என்னும் இரும்புக் கோட்டையை ஈக்களால் தகர்க்க முடியாது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார். எத்தனை இடையூறுகள் வந்தாலும் இரும்புக் கோட்டை உறுதியாக நிற்கும் ஈக்கள் தான் செத்துப் போகும் என்றும் வீரமணி தெரிவித்துள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் 49வது நினைவுதினத்தை முன்னிட்டு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணாவின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : திராவிட அரசியல் என்னும் இரும்புக் கோட்டையை ஈக்களால் தகர்த்து விட முடியாது என்பது தான் மிக முக்கியம்.
எனவே ஈக்கள் எத்தனை பேர் சேர்ந்தாலும் இரும்புக்கோட்டை உறுதியாக நிற்கும். ஈக்கள் தான் செத்துப்போகும் இது தான் இன்றைய அரசியல் நிலவரம்.
இந்த புதிய அரசியல் சூழ்நிலையில் அண்ணாவின் நினைவுநாளில் உறுதியேற்போம். அண்ணா அடித்தளமிட்ட திராவிட அரசியல் ஆயிரம் காலத்து பயிராக என்றைக்கும் பாதுகாப்பப்படும்.
அது தான் பண்பாட்டின் சிகரம், அது தான் பண்பாட்டின் உச்சம். அண்ணாவின் வழியை பாதுகாப்பதற்கு கோடிக்கணக்கான இளைஞர்கள் தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிற கால கட்டம் இது என்றும் கி. வீரமணி கூறியுள்ளார்.