காலா பார்க்க.. கேரள எல்லைப் பகுதிகளை நோக்கி படையெடுக்கும் தமிழக ரஜினி ரசிகர்கள்!
கன்னியாகுமரியில் காலா திரைப்படத்தை ரசிகர்கள் ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர்.
Recommended Video
கன்னியாகுமரி: தமிழக கேரள எல்லை பகுதியான களியக்காவிளையில் இன்று வெளியான காலா திரைப்படத்தை ரசிகர்கள் ஆரவாரத்துடன் கண்டு களித்தனர்.
பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே இன்று உலகம் முழுவதும் காலா திரைப்படம் ரிலீஸ் ஆகும் நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் தமிழக - கேரள எல்லை பகுதிகளில் களியக்காவிளை, ரிச் தம்மீன்ஸ், காளீஸ்வரி, சரஸ்வதி, படந்தாலுமூடு IMP ஆகிய நான்கு திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.
அதிகாலை 6மணிக்கு காலா திரைப்படம் திரையிடப்பட்டது முதல் காட்சியினை ரஜினி ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்துடன் கண்டு ரசித்தனர். முதல் காட்சி தொடங்கும் முன்பே இதற்காக முன்னதாகவே திரையரங்குகளில் ரசிகர்கள் கூடி இருந்து ஆரவாரம் செய்தனர். இன்று இந்த திரையரங்குகளில் காலா திரைப்படம் எட்டு காட்சிகள் திரையிடப்பட உள்ளது.
இதனால் தமிழக ரசிகர்கள் கேரளா பகுதிகளுக்கு படையெடுத்து வருகின்றனர். மேலும் தமிழக எல்லைப் பகுதிகளின் கேரள திரையரங்குகளில் தமிழக ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.