மாணவ, மாணவிகளுக்கு பாராசூட் பயிற்சி அளிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர்
கடையநல்லூர்: நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே மாணவ, மாணவிகளுக்கு பாராடசூட் பயிற்சி அளித்து வருகிறார் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர்.
கடையநல்லூர் அருகே மங்களாபுரம் சிட்கோ தொழிற்பேட்டை உள்ளது. இந்த தொழிற்பேட்டை வாளகத்தில் காலியாக உள்ள நிலத்தில் காவல்துறை மற்றும் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையும் இணைந்து கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள், மாற்று திறனாளிகளுக்கும் மற்றும் ஆர்வமுள்ள வாலிபர்களுக்கும், பொதுமக்களுக்கு பாராசூட் பயிற்சி முகாம் நடத்தி வருகின்றனர்.
நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டு பாராசூட் பயிற்சியில் பங்கேற்று அச்சமின்றி பறந்தனர் காவல்துறை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சரவணன் என்பவரின் 10 வயது மகன் மற்றும் பள்ளி மாணவிகள் பாராசூட்டில் பறந்தது அனைவருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது.
கடையநல்லூர் காவல்துறை ஆய்வாளர் சாம்சன் என்பவரின் முழு முயற்சியின் காரணமாக இப்பகுதியில் இந்த பயிற்சி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் முதன் முறையாக ராணுவம் மற்றும் விமானப் படை வீரர்களுக்கு அளிக்கப்படும் இதுபோன்ற பயிற்சி மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கு கிடைப்பது இப்பகுதி இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.