நேரலைக்கு தயாராகிறது கலைஞர் டிவி
கலைஞர் டிவி நேரலைக்கு தயாராவதாக கூறப்படுகிறது.
Recommended Video
சென்னை: கருணாநிதியின் உடல்நிலை மிகவும் மோசமானதாக உள்ளதாக மருத்துவமனை அறிவிக்கப்பட்டதையடுத்து பல்வேறு உடனடி மாற்றங்கள் கோபாலபுரத்தில் நடந்து வருகிறது.
துர்கா ஸ்டாலின், மோகனா தமிழரசு, செல்வி மற்றும் குடும்பத்தினர் உள்ளிட்ட எல்லோரும் கண்ணீருடன் கதறி அழுதுகொண்டே கோபாலபுரம் இல்லத்திற்குள் சென்றார்கள். மற்றொருபுறம், கோபாலபுரம் 4-வது தெரு போலீசாரின் முழு கட்டுப்பாட்டில் வந்துள்ளது. தொண்டர்கள் உள்ளிட்ட யாரையுமே போலீசார் அந்த பகுதிக்குள் விட அனுமதி மறுத்து வருகின்றனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கருமேகம் சூழ்ந்து மழை கொட்டி வந்தாலும் தொண்டர்கள் கதறியபடி கண்ணீர் வடித்து கோபாலபுரத்தையே சுற்றி சுற்றி வருகிறார்கள். இதனால் ஏராளமான போலீசார்கள் கோபாலபுரம் பகுதியில் பாதுகாப்பில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.
Kalaignar TV sets up outside #Karunanidhi ‘s Gopalapuram residence even as supporters slowly gather. pic.twitter.com/h16bdPxJvz
— Anna Isaac (@anna_isaac) August 7, 2018
இதனிடையே "கலைஞர் டிவி" நேரலை நிகழ்ச்சிக்கு தயாராகும் வேலையில் இறங்கி உள்ளது. நேரலையில் ஒளிபரப்பக்கூடிய உபகரணங்களும் வீட்டு வாயிலின் முன்பு இறக்கப்பட்டு அதற்கான ஆயத்த பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதனிடையே வீட்டினுள் இருந்து கருணாநிதியின் கார் வெளியே எடுக்கப்பட்டுள்ளது.