For Daily Alerts
Just In
தேவகோட்டை பள்ளியில் இளைஞர் எழுச்சி நாள்... மாணவர்களுக்கு காலம் பொன்மொழிகள் எழுதும் போட்டி
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா இளைஞர் எழுச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மாணவர் ஜீவா வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். மாணவர்களுக்கு அப்துல் கலாம் பொன்மொழிகள் எழுதும் போட்டி நடத்தப்பட்டது. அப்துல் கலாம் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் எடுத்து சொல்லப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் ஸ்ரீதர் செய்து இருந்தார். விழாவின் நிறைவாக மாணவி முத்தழகி நன்றி கூறினார்.
English summary
late president Abdul Kalam's birth day was celebrated in Chairman Manickavasagam middle school in Devakottai. Students participated in a contest on Kalam and won the prizes.
Story first published: Sunday, October 16, 2016, 16:15 [IST]