பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.. ஆயிரக் கணக்கானோர் கண்டுகளிப்பு
அழகர்கோயிலில் இருந்து கண்டாங்கி பட்டுடன் தங்கபல்லக்கில் மதுரை வந்த கள்ளழகர் இன்று அதிகாலை ஆறு மணிக்கு வைகை ஆற்றில் இறங்கினார்.
Recommended Video
மதுரை: அழகர்கோயிலில் இருந்து கண்டாங்கி பட்டுடன் தங்கபல்லக்கில் மதுரை வந்த கள்ளழகரை இன்று அதிகாலை ஆறு மணிக்கு வைகை ஆற்றில் இறங்கினார்.
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா உலக பிரசித்திபெற்ற ஒன்றாகும். சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கள்ளழகர் ஆற்றில் இறங்குவார். இதற்காக நேற்று காலையில் மூன்று மாவடியில் எதிர்சேவை துவங்கியது.
இதற்காக அங்கு ஆயிரக்கணக்கில் மக்கள் கூடியிருந்தனர். அங்கு வந்த கள்ளழகரை எதிர்சேவை செய்து வணங்கி வரவேற்றனர். மதுரைக்கு வந்த கள்ளழகர் அங்கிருந்து புதூர் சென்றார். அங்கு பெரிய அளவில் எதிர்சேவை நடந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு முழுக்க எதிர்சேவை நடந்தது. பக்தர்கள் தூங்காமல், கள்ளழகரை சேவித்துக் கொண்டு இருந்தனர். இன்று காலை தங்கபல்லக்கில் மதுரை வந்த கள்ளழகரை இன்று அதிகாலை ஆறு மணிக்கு வைகை ஆற்றில் இறங்கினார். அழகர் கோயில் சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் கோலத்துடன் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை, கிளி , வஸ்திரத்தை சூடி வைகையற்றில் இறங்கினார்.
இந்த நிகழ்விற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து இருந்தனர். இப்போதும் மக்கள் அங்கு கள்ளழகரை நின்று தரிசித்துக் கொண்டு இருக்கின்றனர்.