"லகலகலக" சந்திரமுகியையே மயக்கம் போட வைத்த "கலகல" கல்பனாக்கா!
சென்னை: கபாலி வசனம் மூலம் நம்மை கதி கலங்க வைத்த கல்பனா பாலேஸ் அக்கா, தற்போது சந்திரமுகி பாடல் மூலம் தீப்பொறி பறக்க மீண்டும் களத்தில் இறங்கி இருக்கிறார்.
கல்பனா பாலேஸ். ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் இலங்கைத் தமிழ்ப் பெண். பாட்டுப் பாடுவதில் இவரை அடிச்சுக்க ஆளே கிடையாது. அட்டகாசமான பாடல்களை கூட அட்டுத்தனமாக பாடி அலங்க மலங்க விழிக்க வைத்து சிரிப்புக் காட்டுவதில் கல்பனாதான் இப்போதைக்கு இந்த பூமிப் பந்திலேயே ரொம்பப் பிரபலம்.
"தனி ஒருவளாக" இவர் மொத்தப் பாடல்களையும் மொத்தி எடுப்பதில் கில்லாடி. கபாலி பட நெருப்புடா பாடலை ஊரே கெத்தாகப் பேசி மாஸ் காட்டி வந்த சூழலில், தனது ஸ்டைலில் பாடி ரஜினி ரசிகர்களைத் தெறிக்க விட்டார் கல்பனா அக்கா.
இது ஒன்றும் அவருக்குப் புதிதல்ல... அவ்வப்போது இப்படிப் பாட்டுப் பாடி அதிர்ச்சி வைத்தியம் தருவது தான் கல்பனா அக்கா ஸ்டைல்.
அந்தவகையில் தற்போது புதிய வீடியோ ஒன்றை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், பழைய சந்திரமுகி படத்தில் இடம் பெற்ற 'ரா ரா..' பாடலை தனது ஸ்டைலில் பாடியுள்ளார்.
இதில் நமது வயிறைப் பதம் பார்க்கும் விசயம் என்னவென்றால், கல்பனா அக்காவின் கானத்தில், ஜோதிகா வேடமிட்ட பெண் மயக்கம் போட்டு கீழே விழுந்தது தான்.
நீங்களும் பார்த்து என்ஜாய் பண்ணுங்கள்.. சிரித்து சிரித்து உங்கள் வயிறு புண்ணானால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல பாஸூ...!