For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசின் அலட்சியமே அனைத்து தவறுகளுக்கும் காரணம்: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு கமல் கண்டனம்

அரசின் அலட்சியமே அனைத்து தவறுகளுக்கும் காரணம் என தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து நடிகர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தூத்துக்குடி சோகத்தை தமிழகம் மறக்காது-கமல் ஆவேசம்-வீடியோ

    சென்னை: அரசின் அலட்சியமே அனைத்து தவறுகளுக்கும் காரணம் என தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து நடிகர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இன்று நடத்தப்பட்ட 100வது நாள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    Kamal condemns for the fire in Thoothukudi

    கல் வீச்சு,தடியடி உள்ளிட்ட சம்பவங்களில் பலர் படுகாயமடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நீதி கேட்டு மக்கள் அமைதியாகப் போராடிய பொழுதெல்லாம் அலட்சியப்படுத்தியது அரசுகள்.

    அரசின் அலட்சியமே அனைத்துத் தவறுகளுக்கும் காரணம். இதில் குடிமக்கள் குற்றவாளிகள் இல்லை. அவர்கள் எப்போதும் உயிர் இழக்கிறார்கள். முன்பு ஆலையினால் இப்போது ஆணையினால். அனைவரும் அமைதி காக்க வேண்டும்.

    English summary
    Kamal condemns for the fire in Thoothukudi. Goverments only the reason for all the mistakes he said further.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X