நேரில் உங்களை சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சி டிவியில் கிடைப்பதில்லை- கமல்
Recommended Video
திருப்பூர்: நேரில் உங்களையெல்லாம் சந்திக்கும் இந்த மகிழ்ச்சி எனக்கு டிவியில் கிடைக்காது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்களை சந்திப்பதற்காக கமல்ஹாசன் இன்றைய தினம் திருப்பூர் மாவட்டத்துக்கு செல்கிறார் என்று கூறப்பட்டது இந்நிலையில் அவர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எல்லபாளையம் கிராமத்துக்கு சென்றார். செல்லும் வழியில் உள்ள நல்லதங்காள் ஓடையை பார்வையிட்ட கமல், எல்லம்பாளையத்தில் மரக்கன்றுகளை நட்டார்.
இவர் தத்தெடுத்த 8 கிராமங்களில் ஒன்று எல்லப்பாளையம் கிராமம் ஆகும். இவர் அங்கு மக்களிடம் பேசுகையில், என்ன வேண்டுமானலும் கொடுத்து, என்ன வேண்டுமானாலும் சொல்லி கூட்டத்தை கூட்டுவார்கள். ஆனால் இது அன்பால் சேர்ந்த கூட்டம்.
நேர்மையின் அடையாளம்
நான் உங்களை நம்பியே நாளை நமது என்று இருக்கிறேன். மக்கள் நீதி மய்யம் கட்சி எஞ்சியிருக்கும் நேர்மையின் அடையாளம் என்று நீங்கள் நம்புகிறீர்கள்.நான் மறுபடியும் வருவேன்.
மக்கள் கூட்டம்
உங்கள் அன்பிற்கு கடமைப்பட்டுள்ளேன். நேரில் உங்களையெல்லாம் சந்திக்கும் இந்த மகிழ்ச்சி எனக்கு டிவியில் கிடைக்காது. வெயிலில் நிற்கும் இந்த அன்பு உன்னதமானது. பிக்பாஸும் சினிமாவும் எனக்கு புகழைத் தேடித் தரலாம். ஆனால் நேரில் இங்கே வந்திருக்கும் இந்த மக்கள் கூட்டம் தான் எனக்கு அன்பை தருகிறது.
அரசியல்வாதிகளுக்கு
நான் மட்டும் தனியே எதுவும் செய்துவிட முடியாது. நீங்களும் என்னுடன் இணைந்து செய்ய வேண்டும். மாணவர்கள் அரசியல் புரிந்து கொள்வார்கள் என்று அரசியல்வாதிகளுக்கு பயம் வந்து விட்டது.
மறந்துவிடாதீர்
அதை சொல்வதற்காகவே இங்கு உங்கள் முன் வந்திருக்கிறேன். நாளைய பற்றிய சிந்தனையை மாணவர்கள் சிந்திக்க வேண்டும். நாளைய தமிழகத்தை உருவாக்கும் வலிமை உங்களிடம் இருக்கிறது அதை மறந்துவிடாதீர்கள் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.