அரசியல் சாசனப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.. கமல் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!
மத்திய, மாநில அரசுகளும் அரசியல் சாசனத்தைப் பின்பற்றி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை: மத்திய, மாநில அரசுகளும் அரசியல் சாசனத்தைப் பின்பற்றி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் நடிகர் கமல்ஹாசன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சித்திரை முதல் நாளான நாளை தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தமிழ் மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்அம்பேத்கர் பிறந்த இந்நன்னாளில் அவர் இயற்றிய அரசியல்சாசனத்தின் வழிநடப்போம் என உறுதி ஏற்போம் என்று தெரிவத்துள்ளார்.
#MNMForTN #TamilPride pic.twitter.com/vG9XY7VDrS
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) April 13, 2018
மத்திய, மாநில அரசுகளும் அந்த அரசியல் சாசனத்தைப் பின்பற்றி, தமிழர்களின் கோரிக்கைநிறைவேறும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்று முழங்குவோம், தமிழர் தமிழால் இணைவோம் என தெரிவித்துள்ளார்.