உத்திரமேரூர் கிராம சபை கூட்டத்தில் மக்களோடு மக்களாக பங்கேற்ற கமல்!
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் பங்கேற்றார்.
காஞ்சிபுரம்: உத்திரமேரூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் பங்கேற்றார்.
இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பல இடங்களில் கிராமசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதிக்குட்பட்ட கலியாம்பூண்டி கிராமத்தில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் மக்களோடு மக்களாக ஒரு பார்வையாளராக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டார். மக்களோடு தரையிலேயே அமர்ந்துகொண்டார் கமல்.
நான் பங்கேற்கும் முதல் உத்திரமேரூர் கிராம சபை.
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) October 2, 2018
இங்கே மக்களுடன் மக்களாக இருந்து பார்க்கும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி - நம்மவர்#MakkalNeedhiMaiam#Nammavar#MNMGramPanchayat pic.twitter.com/DZngCiWJ1u
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் நான் பங்கேற்கும் முதல் உத்திரமேரூர் கிராம சபை. இங்கே மக்களுடன் மக்களாக இருந்து பார்க்கும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி - நம்மவர். என தெரிவித்துள்ளார்.