மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுஷன் - சத்யராஜூக்கு கமல் பாராட்டு
பாகுபலி படத்திற்காக கன்னடர்களிடம் வருத்தம் தெரிவித்த நடிகர் சத்யராஜூக்கு , நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை: கர்நாடகாவில் 'பாகுபலி 2' வெளியீட்டில் எழுந்துள்ள சர்ச்சையைச் தொடர்ந்து வருத்தம் தெரிவித்த சத்யராஜின் பதிலுக்கு தமிழ் திரையுலகினர் வரவேற்பு தெரிவித்துள்ளார்கள். மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுஷன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் கருத்து கூறியுள்ளார்.
காவிரி பிரச்சினைத் தொடர்பாக தமிழ் திரையுலகம் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில், கன்னட அமைப்புகளை கடுமையாக சாடிப் பேசினார் சத்யராஜ். வாட்டாள் நாகராஜ் பற்றி விமர்சித்து பேசியது யுடுயூப்பில் இன்னமும் வைரலாகி வருகிறது.
Congrats Mr. Sathyaraj for maintaining rationality in a troubled environement. Quoting VirumaaNdi மன்னிப்புக் கேக்கறவன் பெரியமனுசன். Bravo
— Kamal Haasan (@ikamalhaasan) April 22, 2017
இந்த சூழ்நிலையில்தான் பாகுபலி 2 படம் இன்னும் சில தினங்களில் பல மாநிலங்களில் வெளியாக உள்ளது. இதில் சத்யராஜ் கட்டப்பாவாக நடத்துள்ளார்.
இப்பிரச்சினையை தற்போது கையில் எடுத்துள்ளன கன்னட அமைப்புகள். தன்னுடைய பேச்சுக்கு சத்யராஜ் மன்னிப்பு கேட்டால் மட்டுமே 'பாகுபலி 2' வெளியாகும் என்று கன்னட அமைப்புகள் தெரிவித்துள்ளன.
— Sibi (Sathya)raj (@Sibi_Sathyaraj) April 21, 2017
இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தன்னுடைய நிலைப்பாடு குறித்து பேசி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார் சத்யராஜ். தன்னால் பிரச்சினை வரும் என்று தெரிந்தால் இனி தன்னை யாரும் ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்றும் நடிகர் சத்யராஜ் கேட்டுள்ளார். இதற்கு தமிழ் திரையுலகினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.