மரபணு மாற்ற விதை, காகிதப்பூ- இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமா என்ன?... வேலையை பார்ப்போம்- கமல்
மரபணு மாற்ற விதை, காகிதப்பூ இவற்றுக்கெல்லாம் நாம் பதில் சொல்ல வேண்டுமா என்ன, அவர்கள் பாட்டுக்கு பேசட்டும், நாம் பாட்டுக்கு வேலை செய்வோம் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
Recommended Video
மதுரை: மரபணு மாற்ற விதை, காகிதப்பூ என தன்னை மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளதெற்கெல்லாம் நாம் பதில் சொல்ல வேண்டுமா என்ன, அவர்கள் பாட்டுக்கு பேசட்டும், நாம் பாட்டுக்கு வேலை செய்வோம் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் கட்சியின் பெயரை தொடங்கி வைத்த கமல் பேசுகையில் எங்கள் மேடைகள் செவிசாய்க்கும் மேடைகளாக இருக்கும். இனிவரும் மேடைகளில் எல்லாம் கேள்விகளுக்கு பதில் அளிப்பேன்.
பதில் எனக்கு தெரியாமல் போனால் கேட்டு சொல்ல அவகாசம் தேவைப்படுகிறது. கேள்வி கேட்டால் பதிலை கேட்டு தெரிந்து பதில் அனுப்புவேன்.
உங்கள் உரைநடை, பேச்சில் தமிழ் இருந்தால் தமிழ் வாழும். தமிழை பேச வெட்கப்பட்டால் உடனே செத்துவிடும். நல்ல விஷயங்களை உங்களால் செய்ய முடியாது.
நல்ல விஷயங்கள் சாயல் இருந்திருந்தால் வந்திருக்க மாட்டோம்.
ஆரம்பத்தில் இருந்து தமிழ் கல்வியை கொடுக்க வேண்டியது கடமை. தமிழுக்காக வேறுமொழியை வெறுக்க வேண்டிய அவசியம் இல்லை. மரபணு மாற்ற விதை, காகிதப்பூ மற்றும் போன்சாய் செடி ஆகிய விமர்சனங்களுக்கு சொல்ல முடியாது. அவர்கள் பாட்டுக்கு சொல்லட்டும், நாம் பாட்டுக்கு வேலையை பார்ப்போம், தைரியமாக பேசினால் நியாயம் உங்கள் பக்கம் இருக்கிறது என்று அர்த்தமா என்றார் கமல்.