வளர்மதி பௌர்ணமியை போல் வளர்... டுவிட்டரில் கமல் பாராட்டு
சேலம் மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளதை டுவிட்டரில் நடிகர் கமல் வரவேற்றுள்ளார்.
சென்னை: சேலம் மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்து அவர் விடுவிக்கவுள்ளதற்கு டுவிட்டரில் நடிகர் கமல் வரவேற்றுள்ளார்.
நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் திட்டத்தை எதிர்த்து இயற்கையை பாதுகாக்கும் பல்வேறு போராட்டங்களில் மாணவி வளர்மதி ஈடுபட்டு வந்த சேலம் மாணவி வளர்மதி கைது செய்யப்பட்டு பின்னர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.
இதை எதிர்த்து அவரது தந்தை மாதையன் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிடப்பட்டது. இந்த தீர்ப்பை வரவேற்று நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.
வளர்மதி வளர்,பௌர்ணமியை நோக்கி. மயங்கா நீதி தேவர்க்கும் வணக்கம்
— Kamal Haasan (@ikamalhaasan) September 5, 2017
அதில் வளர்மதி வளர், பௌர்ணமியை நோக்கி. மயங்கா நீதி தேவர்க்கும் வணக்கம் என்று தெரிவித்துள்ளார். அதாவது, வளர்மதியை பெளர்ணமியை போல் வளர வாழ்த்துக்கள், இன்னும் நீதி சாகவில்லை என்று குண்டர் சட்டத்தை நீக்கிய நீதிபதிக்கு வணக்கம் என்பதும் அதன் பொருளாகும்.