For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடுத்த தேர்தல் வரை கூட கமல் தாக்குப்பிடிப்பாரா என்பது சந்தேகமே : மைத்ரேயன்

அடுத்த தேர்தல் வரை கூட கமல் தாக்குப்பிடிப்பாரா என்பது சந்தேகமே என்று மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    அடுத்த தேர்தல் வரை கூட கமல் தாக்குப்பிடிப்பாரா என்பது சந்தேகமே-வீடியோ

    சென்னை : அடுத்த தேர்தல் வரும்வரை கூட கமல்ஹாசன் அரசியல் இருப்பாரா என்பது சந்தேகம் தான் என்று அதிமுகவின் அமைப்புச் செயலாளர் மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.

    சென்னையை அடுத்த திருக்கழுக்குன்றத்தில் அதிமுக சார்பில் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மைத்ரேயன் எம்பி கலந்து கொண்டு பேசினார்.

    Kamal presence in Politics is Doubts says Maitreyan

    அப்போது அவர் பேசுகையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அரசின் தலைமையில், பல்வேறு கட்ட சட்டப் போராட்டங்களைக் கடந்து காவிரி நீரைப் பெற்றுத்தந்துள்ளது.

    இந்த ஆட்சி 21 நாட்களே நீடிக்கும் என்று டி.டி.வி தினகரன் சொன்னார். ஆனால், தீர்ப்பு அதிமுகவிற்கு சாதகமாக வந்து பாதிப்பின்றி ஆட்சி தொடர்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனை கடுமையான முயற்சிக்குப் பிறகு தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது. அடுத்த ஆண்டு மருத்துவமனை திறக்கப்படும்.

    கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்துவிட்டு மக்களைச் சந்திப்பதற்கு பதில், வரிசையாகத் தலைவர்களைச் சந்தித்து வருகிறார். மக்களை மட்டுமே நம்பியுள்ள அதிமுகவிற்கு யாரும் சவாலாக வர முடியாது.

    அடுத்த தேர்தல் வரும் வரையாவது கமல்ஹாசன் அரசியலில் நீடிப்பாரா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. அவரின் செயல்பாடுகளும் அப்படித்தான் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Kamal presence in Politics is Doubts says Maitreyan. ADMK MP Maitreyan says that, ADMK is the only party with people support.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X