For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஜினி, கமலால் பிரச்சனை இல்லை.. நான்தான் நம்பர் ஒன்.. ஆர்.கே நகரில் தினகரன் பேச்சு!

ரஜினி, கமல் கட்சி ஆரம்பித்தாலும் பிரச்சனை இல்லை என்று டிடிவி தினகரன் பேசி இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: ரஜினி, கமல் கட்சி ஆரம்பித்தாலும் பிரச்சனை இல்லை என்று டிடிவி தினகரன் பேசி இருக்கிறார். மேலும் அவர்களால் தேர்தலில் பாதிப்பு இருக்காது என்றும் கூறியுள்ளார்.

ஆர்.கே நகர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக நின்று தினகரன் அபாரமாக வெற்றிபெற்றார். அதன்பின் நடந்த முதல் சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்டு தனது முதல் சட்டமன்ற பேச்சை பேசினார்.

Kamal and Rajini won't make effect in elections - TTV

இந்த நிலையில் தற்போது அவர் ஆர்.கே நகர் சென்று இருக்கிறார். அப்போது அவர் ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் பிரவேசம் குறித்து பேசினார்.

அதில் ''ரஜினியும், கமலும் கட்சி தொடங்க போவதாக அறிவித்து இருக்கிறார்கள். ஆனால் அவர்களால் தேர்தலில் எதுவும் செய்ய முடியாது'' என்று கூறியுள்ளார்.

மேலும் ''அவர்கள் அரசியலுக்கு வருவதால் எங்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை. அவர்கள் உள்ளாட்சி தேர்தலில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரப்போவதில்லை.'' என்றுள்ளார்.

மேலும் ''உள்ளாட்சி தேர்தலில் எங்கள் பலம் தெரியும். நாங்கள் அதிமுக அம்மா அணி என்று பெயரில் செயல்பட இருக்கிறோம். ரஜினி, கமல் வந்தாலும் நான்தான் எப்போதும் நம்பர் 1'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

English summary
TTV Dinakaran meets RK Nagar people after election. He says Thanks to every people who votes for him, who made him as the MLA for RK Nagar. In this he says tha Kamal and Rajini wont make big effect in election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X