நடிகர் சங்கத்தேர்தல்: தலைவர் போட்டியில் நாசர்... ஆதரவுக் கரம் நீட்டினார் கமல்...!
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேதலில் விஷால் அணிக்கு நடிகர் கமல் தனது ஆதரவுகளைத் தெரிவித்துள்ளார்.
2015-18-ம் ஆண்டுகளுக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தல் வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் நடிகர் சரத்குமார் தலைமையிலான அணியும், விஷால் தலைமையிலான அணியும் எதிரெதிராக போட்டியிடுகின்றன.
தலைவர் பதவிக்கு சரத்குமார் மீண்டும் போட்டியிடுகிறார். விஷால் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நாசர் போட்டியிடுகறார். பொதுச் செயலாளர் பதவிக்கு விஷால் போட்டியிடுகிறார். இதனால், தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.
இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று சென்னையில் தொடங்கியது. நடிகர் சரத்குமார் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த சூழ்நிலையில், விஷால் அணிக்கு நடிகர் கமல் தனது ஆதரவுகளைத் தெரிவித்துள்ளார். அந்த அணியிலிருந்து தலைவர் பதவிக்கு நாசர் போட்டியிடுகிறார். தலைவர் பதவிக்கு நாசரை களமிறக்கும் விண்ணப்பத்தில் கமல் முன்மொழிந்துள்ளார். அதனை நடிகை கவுதமி வழிமொழிந்துள்ளார்.