வதந்திகள் உயிருக்கே ஆபத்தை விளைவிப்பது கவலை தருகிறது- கமல்ஹாசன்
வதந்திகள் உயிரை காவு கொள்வது குறித்து நடிகர் கமல்ஹாசன் கவலை தெரிவித்துள்ளார்.
சென்னை; வதந்திகள் உயிருக்கே ஆபத்தை விளைவிப்பது கவலை தருகிறது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
குழந்தை கடத்தல்காரர்கள் உலா வருகிறார்கள் என்கிற வாட்ஸ் அப் வதந்திகளால் சந்தேக நபர்களை பொதுமக்கள் தாக்குவதும் கொலை செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக கமல்ஹாசன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
வதந்திகள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடியவையாக இருப்பது கவலையளிக்கிறது.
மக்கள் விழிப்புடன் இருப்பதோடு பொறுப்புடன் இருப்பதும் முக்கியம்.
வதந்திகள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடியவையாக இருப்பது கவலையளிக்கிறது.
— Kamal Haasan (@ikamalhaasan) May 11, 2018
மக்கள் விழிப்புடன் இருப்பதோடு பொறுப்புடன் இருப்பதும் முக்கியம்.
சட்டத்தை கைகளில் எடுத்துக்கொண்டு செயல்படுவது பொறுப்புள்ள குடிமக்களின் அடையாளமன்று.காவல்துறையிடம் தெரிவிப்பதே நமது பொறுப்பும் கடமையும் ஆகும்.
சட்டத்தை கைகளில் எடுத்துக்கொண்டு செயல்படுவது பொறுப்புள்ள குடிமக்களின் அடையாளமன்று. காவல்துறையிடம் தெரிவிப்பதே நமது பொறுப்பும் கடமையும் ஆகும்.
இவ்வாறு கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.