சுதந்திரம் குறித்து விழிப்புடன் இருக்க உறுதியளிப்போம். கமல் போட்ட நச் டுவிட்!
சென்னை: குடியரசு தின வாழ்த்து சொல்லி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் தனது பதிவில், சுதந்திரம் குறித்து விழிப்புடன் இருக்க உறுதியளிப்போம் என்று கூறியுள்ளார்.
நாட்டின் 71வது குடியரச தினத்தையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், குடியரசு தினத்தை கொண்டாடி வருகிறோம். இந்த நாட்டின் மக்களாக நாம் அரசியல் அமைப்பில் அதிகாரம் பெற்றவர்கள். இந்த குடியரசை நம் அனைவருக்கும் வழங்கிய சுதந்திரம் குறித்து விழிப்புடன் இருப்பதாக உறுதி அளிப்போம். நாம் ஒன்றாக முடிவு எடுத்தால் மட்டுமே நாடு மென்மேலும் உயரும்.. பிரிந்தால் அல்ல...' என்று டுவிட் போட்டுளளார்.
Celebrate our Republic, everyday. We, the People are its custodians, empowered by its constitution. We will pledge to keep vigil on the liberty that this Republic has granted us. The Nation will rise to more glory if only we decide, not when we divide.
— Kamal Haasan (@ikamalhaasan) January 26, 2020