சிறந்த ஆட்சியர்கள், சிறந்த மாநகராட்சி, சிறந்த கமிஷனர்.. மாநாட்டில் விருதுகள் வழங்கினார் முதல்வர்!
சிறந்த ஆட்சியர்கள், சிறந்த கமிஷனர் மற்றும் சிறந்த மாநகராட்சிக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை: சிறந்த ஆட்சியர்களுக்கான விருது காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா, விழுப்புரம் ஆட்சியர் சுப்பிரமணியன், சேலம் ஆட்சியர் ரோகினி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 3 நாட்களாக முதல்வர் தலைமையில் நடைபெற்று வந்த மாவட்ட ஆட்சியர்கள் - காவல்துறை அதிகாரிகள் மாநாடு நிறைவு பெற்றது. சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு நடைபெற்றது.
நிறைவு நாளான இன்று சிறந்த மாவட்ட ஆட்சியர்கள், சிறந்த காவல் ஆணையர் மற்றும் சிறந்த மாநகராட்சிக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. சிறந்த ஆட்சியருக்கான விருது மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா, விழுப்புரம் ஆட்சியர் சுப்பிரமணியன், சேலம் ஆட்சியர் ரோகினி ஆகியோருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறந்த ஆட்சியருக்கான விருதை வழங்கினார்.
சிறந்த காவல் ஆணையருக்கான விருது சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த மாநகராட்சியாக சென்னை மாநகராட்சி அறிவிக்கப்பட்டுள்ளது.