For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடைசியில் காஞ்சிபுரம் கஜலட்சுமியைும் தூக்கி அடித்து விட்டது பாழாய்ப்போன அரசியல்!

Google Oneindia Tamil News

சென்னை: நல்ல விஷயங்களை மட்டுமே செய்து வந்த மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்ற காஞ்சிபுரம் கலெக்டர் கஜலட்சுமியையும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் ஆசி பெற்ற எடப்பாடி பழனிச்சாமி அரசு தூக்கி அடித்து விட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக அட்டகாசமாக செயல்பட்டு வந்தவர் கஜலட்சுமி. கடந்த காலத்தில் சென்னை புறநகர்களை வெள்ளம் புரட்டி எடுத்த சம்பவத்தின்போது அதிரடியாக செயல்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் ஈடுபட்டவர் கஜலட்சுமி.

Kanchipuram collector shifted

அரசியல்வாதிகளின் மிரட்டலையும் பொருட்படுத்தாமல் கால்வாய் ஆக்கிரமிப்புகளை தவிடுபொடியாக்கினார். பெரிய பெரிய கட்டடங்களையும் கூட தரைமட்டமாக்கி அனைவரையும் நடுங்க வைத்தார். தற்போது அவரைத் தூக்கி அடித்து விட்டார்கள் எடப்பாடி அரசினர். அவரை சென்னை பெருநகர மாநகராட்சியின் இணை இயக்குநராக நியமித்துள்ளனர். காஞ்சிபுரம் கலெக்டராக பொன்னையா நியமிக்கப்பட்டுள்ளார்.

இறையன்பு காஞ்சிபுரம் கலெக்டராக இருந்தபோது இப்படித்தான் அதிரடியாக செயல்பட்டார். மிகச் சிறந்த செயல்பாடுகளால் மக்களின் ஏகோபித்த அன்பையும் ஆதரவையும் பெற்றார். அவரை அரசியல் நெருக்கடிகள் காரணமாக இடமாற்றம் செய்தபோது அதற்காக மக்கள் போராட்டங்களிலும் குதித்தனர். இப்போது இன்னொரு அருமைாயன கலெக்டரை காவு வாங்கி விட்டார்கள் இந்த பாழாய்ப் போன அரசியல்வாதிகள்.

கலெக்டர் கஜலட்சுமி அதிரடியாக செயல்பட்டது தொடர்பான கடந்த கால செய்தி:கலெக்டர் கஜலட்சுமி அதிரடியாக செயல்பட்டது தொடர்பான கடந்த கால செய்தி:

English summary
Kanchipuram collector Gajalakshmi has been shifted to a low key post in Chennai today evening.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X