போய்ட்டு வாங்கப்பா.. கருணாநிதி தலையை வருடி முகத்துக்கு முத்தம் கொடுத்த கனிமொழி
கருணாநிதியின் தலையை வருடி விட்டு முகத்துக்கு முத்தம் கொடுத்தார் கனிமொழி.
சென்னை: கருணாநிதியின் தலையை வருடி விட்டு முகத்துக்கு முத்தம் கொடுத்து பிரியாவிடை கொடுத்தார் கனிமொழி.
கருணாநிதியின் நேற்று மாலை காலமானார். அவரது உடல் இன்று தொண்டர்கள் கண்ணீர் கடலில் மிதந்தபடி அண்ணா சமாதியை வந்தடைந்தது.
பின்னர் கருணாநிதி குடும்பத்தினரும் முக்கியஸ்தர்களும் அஞ்சலி செலுத்தினர்.
கருணாநிதி மீது போர்த்தப்பட்ட தேசியக் கொடி ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் சந்தன பேழைக்குள் இறக்கப்பட்டது.
M #Karunanidhi's family pays last tribute to the DMK chief at Marina beach. Burial to take place shortly pic.twitter.com/hNIW5dkjOy
— ANI (@ANI) August 8, 2018
அப்போது குடும்ப உறுப்பினர்கள் மலரஞ்சலி செய்தனர். அந்த சமயம் அழகிரி, ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், ராஜாத்தி அம்மாள், செல்வி, தமிழரசன் உள்ளிட்டோர் கதறி அழுதனர்.
இதையடுத்து கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய கனிமொழி தந்தையின் தலையை வருடி விட்டு முகத்துக்கு முத்தம் கொடுத்து பிரியாவிடை அளித்தார். இதையடுத்து துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் குழிக்குள் இறக்கப்பட்டது.