அதிமுகவினரை ஒரு பக்கம் மீசையின்றி பார்க்க தயாராக இல்லை- கனிமொழி எம்.பி.
அதிமுகவினரை ஒரு பக்கம் மீசையின்றி பார்க்க நாங்கள் தயாராக இல்லை என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
சென்னை: அதிமுகவினரை ஒரு பக்கம் மீசையின்றி பார்க்க நாங்கள் தயாராக இல்லை என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
காவிரி விவகாரம் பூதாகரமாக ஆக யார் காரணம் என திமுகவும், அதிமுகவும் மாறி மாறி குறை கூறிக் கொள்கின்றனர்.ஆனால் தீர்வு என்னவோ கிடைத்தது போல் தெரியவில்லை.
1972-ஆம் ஆண்டு ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள இந்திரா அரசுக்கு பயந்து கொண்டு உச்சநீதிமன்றத்தில் காவிரி வழக்கை கருணாநிதி வாபஸ் பெற்றதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். அதுபோல் காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் திறமை வாய்ந்த வழக்கறிஞர்களை வைத்து அதிமுக அரசு வாதாட வைக்கவில்லை என்று திமுகவும் குறை கூறி வருகிறது.
இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் சிவி சண்முகம் கூறுகையில் காவிரி பிரச்னையை தீர்க்க திமுக என்ன செய்தது என்பதை ஸ்டாலினால் சொல்ல முடியுமா? ஏதேனும் ஒரு தகவலை ஸ்டாலின் கூறினால் ஒரு பக்க மீசையை அதிமுகவினர் எடுத்துக்கொள்வர்.
மத்தியில் அங்கம் வகித்த போது காவிரி விவகாரத்தில் என்ன செய்தது திமுக? என்று சரமாரி கேள்விகளை அவர் எழுப்பியிருந்தார். இதற்கு பதில் கனிமொழி எம்.பி. பதில் அளித்துள்ளார்.
சென்னை கிண்டியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை கனிமொழி எம்பி சந்தித்து பேசினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில் அதிமுகவினரை மீசையில்லாமல் பார்ப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்திப்பில் அரசியல் இல்லை என்று கனிமொழி தெரிவித்தார்.