அப்பா எப்படி இருக்கிறார்ம்மா என்ற கேள்விக்கு கண்கலங்கிய கனிமொழி
அப்பா எப்படி இருக்கிறார் என்ற கேள்விக்கு கனிமொழி கண்கலங்கியதாக தொண்டர் ஒருவர் தெரிவித்தார்.
சென்னை: அப்பா எப்படி இருக்கிறார் என்ற கேள்விக்கு கனிமொழி கண்கலங்கியதாக தொண்டர்கள் தெரிவித்தனர்.
கருணாநிதிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 11 நாட்களாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்றைய தினம் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.
எதுவாக இருந்தாலும் 24 மணி நேரத்துக்கு பிறகே தெரிய வரும் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறிவிட்டது. இந்நிலையில் இன்று காலை முதலே கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.
அவரது ரத்த அழுத்தம், இதயதுடிப்பு மற்றும் ஆக்ஸிஜன் அளவு குறைந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இதையடுத்து காவேரி மருத்துவமனையில் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர்.
இந்நிலையில் மருத்துவமனைக்கு வந்துவிட்டு வெளியே வந்த கனிமொழியிடம் தொண்டர்கள் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். அப்போது கனிமொழி கண் கலங்கிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.