அழகின் சிரிப்பு.. மகள் கனிமொழியுடன் செல்ஃபி... மலர்ந்த முகத்துடன் கருணாநிதி!
திமுக தலைவர் கருணாநிதி இன்று தனது மகள் கனிமொழியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
சென்னை: மகள் கனிமொழி உடனான செல்ஃபியில் குழந்தை போல மலர்ந்து சிரித்தார் கருணாநிதி. அவரது சிரிப்பு தொண்டர்களுக்கு புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.
உடல்நலக்குறைவினால் ஓராண்டு காலம் ஒய்வெடுத்து வந்தார் கருணாநிதி. கடந்த 20 நாட்களாகவே வீட்டை விட்டு வெளியே வந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இது ஊடகங்களில் வெளியாகி வருகிறது. கருணாநிதியின் உற்சாக செயல்பாடுகளினால் தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதனிடையே சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி திமுக தலைவர் கருணாநிதியை அவரது வீட்டிற்கே வந்து இன்று சந்தித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதனையடுத்து கருணாநிதி அதிக உற்சாகத்துடன் வலம் வந்தார். தொண்டர்களைப் பார்த்து கையைத்தார்.
அப்போது மோடியை வரவேற்க வந்த கனிமொழி, தனது தந்தையை சந்தித்து பேசினார். அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். மகளுடனான செல்ஃபியில் அதிக உற்சாகமாக மலர்ந்து சிரித்தார் கருணாநிதி. இந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.