For Daily Alerts
Just In
கனமழை எதிரொலி: குமரியில் குளம் உடைந்து ஊருக்குள் நீர் புகுந்தது
கன்னியாகுமரி: கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கன்னியாகுமரி அருகே குளம் உடைந்து, ஊருக்குள் நீர் புகுந்தது. சுமார் 500 ஏக்கர் விவசாய நிலம் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தென் மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்தவகையில் கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் வரகுணமங்கலம் பகுதியில் உள்ள செங்குளம் உடைந்தது. இதனால், ஊருக்குள் நீர் புகுந்தது. ஈச்சாங்குளம் பகுதியில் அரசு அலுவலகங்கள் நீரில் மூழ்கின.
அப்பகுதியில் உள்ள 500 ஏக்கர் விவசாய நிலமும் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
Comments
English summary
Near Kanyakumari, a village pond broke out because of heavy rain.
Story first published: Sunday, November 30, 2014, 11:18 [IST]