நகராட்சிப் பள்ளி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி
காரைக்குடி: அனைவருக்கும் கல்வி இயக்கம், பெண் கல்வித் திட்டம் மூலம் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் காரைக்குடியில் உள்ள இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர் நிலைப் பள்ளி மாணவிகளுக்கான கராத்தே முகாம் தொடங்கி வைக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, உள்ள இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் இத்திட்டத்தின் துவக்கவிழா இன்று தலைமையாசிரியர் பீட்டர் ராஜா தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் பயிற்சியாளர் பிரகாஷ், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பட்டதாரி ஆசிரியை ஏ. கீதா அனைவரையும் வரவேற்றார். இத்திட்டத்தின் மூலம் 7 மற்றும் 8 ம் வகுப்பில் பயிலும் 5௦ மாணவிகளுக்கு வாரத்தின் இரு நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சி 5 மாதங்களுக்கு அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியை கராத்தே மாஸ்டர் பிரகாஷ் அளிக்கவுள்ளார். பட்டதாரி ஆசிரியை எஸ்.சித்ரா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். பட்டதாரி ஆசிரியை விஜயலெட்சுமி நன்றி கூறினார்.