அதிமுக வேட்பாளர் தேர்வைப் பாராட்டும் கார்த்தி சிதம்பரம்- வாசனுக்கும் கொட்டு!
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிடம் கொள்கையும் இல்லை, கோட்பாடும் இல்லை. சுயநலமிக்க தலைவராக ஜி.கே.வாசன் விளங்குகிறார் என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் ஜி.கே.வாசனை சாடியுள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள டிவிட்...
TMC is without any political rationale or ideology. Goal of its leadership has always been to secure a RS berth. https://t.co/dmEt697kEs
— Karti P Chidambaram (@KartiPC) April 5, 2016
தமிழ் மாநில காங்கிரஸ் எந்தவிதமான அரசியல் நோக்கமோ, கொள்கையோ இல்லாத ஒரு கட்சி. அந்தக் கட்சியின் தலைவரின் ஒரே நோக்கம், எப்படியாவது தனக்கு ஒரு ராஜ்யசபா சீட்டைப் பெற்று விட வேண்டும் என்பது மட்டுமே என்று சாடியுள்ளார் கார்த்தி சிதம்பரம்.
இன்னொரு டிவிட்டில், அதிமுக வேட்பாளர் தேர்வைப் பாராட்டியுள்ளார் கார்த்தி சிதம்பரம். அதாவது அதிமுகவில் புதுமுகங்களுக்கு இடம் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது என்று கூறியுள்ளார் கார்த்தி சிதம்பரம்.