ஓட்டு.. பால்.. விஷம்.. கார்த்தி பேச்சு!
திருச்சி: தப்பித் தவறி ஒரு ஓட்டு கூட அவர்களுக்கு போய் விடக் கூடாது. அப்படிப் போனால் பாலில் கலந்த விஷம் போலாகி விடும் என்று நடிகர் கார்த்தி பேசியுள்ளார்.
நடிகர் சங்கத் தேர்தலையொட்டி நாசர் - விஷால் குழுவினர் திருச்சியில் நாடக நடிகர்களைச் சந்தித்து பிரசாரம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களையும் சந்தித்துப் பேசினர்.
அப்போது கார்த்தி பேசுகையில், நடிகர் சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் தனது பிள்ளையின் படிப்புக்காக வந்திருந்தார். அவர்களை அழைத்துக்கொண்டு போய் காலேஜில் சீட் கேட்டோம். உங்களுக்கு இல்லாதா சீட்டா. கண்டிப்பாக சேர்த்துக்கொள்கிறோம் என்றனர்.
சேலை விக்கவும், துணி விக்கவும் எங்க முகத்தை விற்கிறோம். அப்படி இருக்கையில் நாங்க உங்களுக்காக யாருகிட்ட வேண்டுமானாலும் நிற்க தயாராக இருக்கிறோம். இந்த வயதில்தான் அண்ணன் ராதாரவியும் சங்க பொறுப்புக்கு வந்தாரு.
ஒரு ஓட்டு அவங்களுக்கு போய் விடக் கூடாது. அப்படிப் போனால் கூட அது பாலில் விஷம் கலந்த மாதிரி என்றார் கார்த்தி.