அண்ண்ண்ணே.... அழகிரிக்குப் போன் போட்டு 'சென்சேஷனலாக' பேசிய 'டொப்பி' கார்த்திக்!
மதுரை: இன்விசிபிள் அரசியல் தலைவரான நடிகர் கார்த்திக் திடீரென மு.க.அழகிரியிடம் பேசி பாசம் பாராட்டியுள்ளார்.
மதுரையில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் அழகிரி மும்முரமாக பேசிக் கொண்டிருந்தபோதுதான் இப்படி திடீரென போனைப் போட்டு பாசத்தைக் கொட்டியுள்ளார் கார்த்திக்.
மதுரையில் மு.க.அழகிரி தனது ஆதரவாளர்கள் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினார். அவர்களது கருத்துக்களைக் கேட்டார். பின்னர் இறுதியாக உறுக்கமாக பேசினார்.
அப்போது அவர் பேசுகையில் நடிகர் கார்த்திக் தன்னுடன் போனில் பேசியதாக குறிப்பிட்டார் கூட்டத்தினரிடம். அதுகுறித்து அழகிரி கூறுகையில்,இங்கே நான் அமர்ந்திருந்தபோது, நடிகர் கார்த்திக் எனக்கு போன் பண்ணினாரு.
மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரைச் சூட்ட பிரதமரிடம் வலியுறுத்தியதற்கு எனக்கு நன்றி சொன்னாரு. நான்கூட சும்மா சம்பிரதாயமாக பேசுவாரோ என்று நினைத்தேன். ஆனா, உணர்ச்சிவசப்பட்டு பேசினாரு. அவர் நீண்ட காலமாக என் நண்பராக, விசுவாசியாக இருப்பவர் என்றார் அழகிரி.
அழகிரி இப்படிக் கூறியதும் கூட்டத்தினர் மத்தியில் சின்னதாக ஒரு உற்சாகக் களை காணப்பட்டதாம். ஆதரவு பல பக்கத்திலும் திரண்டு வருவதால் இருக்குமோ....