படத்துல நடிக்காம ஸ்டேஜ்ல நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.. போட்டுத்தாக்கும் கரு பழனியப்பன்
நடிகர் சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்காமல் பட ப்ரோமோஷன் ஸ்டேஜ்களில் கண்ணீர் விட்டு நடிப்பதாக இயக்குநர் கருப்பழனியப்பன் விளாசியுள்ளார்.
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்காமல் பட ப்ரோமோஷன் ஸ்டேஜ்களில் கண்ணீர் விட்டு நடிப்பதாக இயக்குநர் கருப்பழனியப்பன் விளாசியுள்ளார். அதேநேரத்தில் நடிகர் விஜய்சேதுபதி சிவாஜியைப் போல் எல்லா ரோல்களிலும் கலக்குவதாகவும் புகழாரம் சூட்டியுள்ளார்.
பட்டதை பட்டெனப் பேசும் திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் ஜல்லிக்கட்டு, நெடுவாசல் என தமிழர் உரிமை போராட்டங்களில் தொடர்ந்து குரல் கொடுத்த வருகிறார். மக்கள் விரோதப் போக்குடன் செயல்படும் அரசையும் விமர்சித்த கண்டனங்கள் தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இயக்குநர் கரு.பழனியப்பன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் நடிகர் சிவகார்த்தியனை சரமாரியாக விளாசினார்.
விஜய் சேதுபதிக்கு புகழாரம்
தற்போது தமிழகத்தில் மக்கள் விரும்பும் நாயகனாக இருப்பவர் நடிகர் விஜய்சேதுபதி என்றார். விஜய்சேதுபதி 67களில் சிவாஜிகணேசனை போல் அனைத்து கதாப்பாத்திரங்களிலும் தயக்கமின்றி சிறப்பாக நடிப்பதாக கூறினார்.
சிவகார்த்திகேயனை விளாசிய கரு.
மக்கள் விரும்புவதுபோல் விதவிதமான கதாப்பாத்திரங்களில் நடிப்பதால் அவர் படங்கள் ஹிட் ஆவதாக கூறிய கரு.பழனியப்பன், நடிகர் சிவகார்த்திகேயன் எப்போதும் ஒரே கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக கூறினார்.
ஸ்டேஜ்களில் கண்ணீர் விடும் சிவகார்த்திகேயன்
மேலும் படத்தில் நடிக்காமல் பட ப்ரோமோஷன்களின் போது ஸ்டேஜ்ஜில் கண்ணீர் விட்டு நடிப்பதாகவும் அவர் கூறினார். புரொடியுசரிடம் பணமில்லை, கார் இல்லை எனக் கண்ணீருடன் கூறி மக்களை தியேட்டருக்கு வரவழைப்பதாகவும் கூறினார்.
|
சினிமா வட்டாரத்தில் பரபரப்பு
படத்திற்கு படம் வித்தியாசம் காட்டும் விஜய்சேதுபதி கண்ணீரும் விடுவதில்லை ப்ரோமோஷனுக்கும் வருவதில்லை. சிரித்துக்கொண்டே அடுத்த வேலையை தொடங்கி விடுகிறார் என்றார். கரு.பழனியப்பனின் இந்த பேச்சு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது.