திமுக கூட்டணியில் உள்ள மமக போட்டியிடும் தொகுதிகள் எவை?: இன்று தெரியும்
சென்னை: திமுக கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் பெயர்கள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் தங்களுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து புதிய தமிழகம் கட்சிக்கு ஒட்டப்பிடாரம், வாசுதேவநல்லூர், ஸ்ரீவில்லிப்புத்தூர், கிருஷ்ணராயபுரம் ஆகிய நான்கு தொகுதிகளை ஒதுக்கி இன்று அறிவித்தார் கருணாநிதி.
தாங்கள் கேட்ட தொகுதிகள் தங்களுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். இந்நிலையில் தொகுதி பங்கீடு குறித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா திமுக தொகுதி பங்கீ்ட்டு குழுவுடன் வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்.
இது குறித்து ஜவாஹிருல்லா கூறுகையில்,
வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும். எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 தொகுதிகள் எவை என்று கருணாநிதி இன்று அறிவிப்பார் என்றார்.